மெண்டல் ஹாஸ்பிடல்; குடிச்சிட்டு தெருவுல கிடந்தேன்? குடும்பமே கண்டுக்காம.. நாகேஷ் மகன் வேதனை!

Anand Babu Tamil Cinema Tamil TV Serials Tamil Actors Tamil Actress
By Jiyath May 07, 2024 01:27 PM GMT
Report

தன்னைப் பற்றி வெளியான செய்திகள் குறித்து நடிகர் ஆனந்த் பாபு பேசியுள்ளார்.

ஆனந்த் பாபு 

மகா கலைஞன் மறைந்த நடிகர் நாகேஷின் மகன் தான் ஆனந்த் பாபு. கீதம் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 80-ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக திகழ்ந்தார்.

மெண்டல் ஹாஸ்பிடல்; குடிச்சிட்டு தெருவுல கிடந்தேன்? குடும்பமே கண்டுக்காம.. நாகேஷ் மகன் வேதனை! | Actor Nand Babu Opens Up About Fake News

தொடர்ந்து இளமை, பந்தம், கடமை, உதயகீதம், புது வசந்தம், புரியாத புதிர், புத்தம் புது பயணம், சேரன் பாண்டியன் வானமே எல்லை, ஆதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும், தனது சிறப்பான நடனத்தால் தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்தார்.

சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகர் ஆனந்த் பாபு, தற்போது சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தன்னைப் பற்றி வெளியான செய்திகள் குறித்து பேசியுள்ளார்.

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

அது தப்பு தானே?

அவர் கூறியதாவது "நான் மெண்டல் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனதாக செய்தி வந்தது. பத்திரிக்கையாளர்கள் என்ன நடந்தது என்று தெரிஞ்சிக்கிட்டு எழுதுனாங்கன்னா நல்லாருக்கும். அந்த ஹாஸ்பிட்டலில் என் கூட படிச்சவரு டாக்டரா இருக்காரு.

மெண்டல் ஹாஸ்பிடல்; குடிச்சிட்டு தெருவுல கிடந்தேன்? குடும்பமே கண்டுக்காம.. நாகேஷ் மகன் வேதனை! | Actor Nand Babu Opens Up About Fake News

அவர பார்க்க தான் போனேன். அத இப்படி எழுதியிருக்காங்க. என்னை பொறுத்தவரை இந்த செய்திகள் எல்லாம் தானாவே ஆறீரட்டும்னு விட்டுரனும். நான் மது குடிச்சேன் தான். அதுக்காக 24 மணி நேரமும் நான் குடிச்சிட்டு இருந்தேன்னு எழுதுனா அது தப்பு தானே?

நான் எங்கயாவது குடிச்சிட்டு தெருவுல படுத்து கிடந்துருக்கேனா? அத நீங்க போட்டோ எடுத்து போட்டுருக்கீங்களா? நான் வீட்ல தான் படுத்துருக்கேன். இந்தமாதிரி செய்திகளை கண்டுக்காம இருங்கன்னு என் குடும்பத்தாரிடம் சொல்லிட்டேன். இந்த தலை வலி எதுக்கு.. விட்டுருங்கன்னு சொல்லிட்டேன்" என்று பேசியுள்ளார்.