அந்தப் பழக்கம் தான் கார்த்திக் காணாமல் போக காரணம் - அதிர்ச்சி தகவல்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர் கார்த்திக் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பல தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்திக்
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கியவர் நவரச நாயகன் கார்த்திக். இதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் காதல் மன்னனாகவும் வலம் வந்தார்.
1988ஆம் ஆண்டு சோலைக்குயில் எனும் படத்தில் தன்னுடைய இணைந்து நடித்த நடிகை ராகினியை காதலித்து அதே ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். அதன்பின் 4 ஆண்டுகளுக்கு பிறகு, தன் மனைவியின் சொந்த தங்கையான ரதியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
வீழ்ச்சி
இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் கௌதம் கார்த்திக் தற்போது சினிமாவில் நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில், கார்த்திக் மது பழக்கம், சூட்டிங்கிற்கு சரி வர வராத காரணம் போன்றவற்றால் சினிமாவில் தன்னுடைய இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்.
ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த நாயகனாக தன்னை காட்டிக்கொண்டதும் அவர்களுக்காக ஒரு கட்சியை ஆரம்பித்ததும் ஒரு சிறந்த நடிகனின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகவும் இருந்ததாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.