நான் சொல்றவருதான் வாரிசு - 3வது திருமணம் செய்ய போகும் நடிகர்!

Tamil Cinema Marriage Crime Divorce
By Sumathi Oct 22, 2024 06:00 PM GMT
Report

நடிகர் பாலா 3வது திருமணம் குறித்து பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

நடிகர் பாலா 

தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா. தொடர்ந்து அப்பா அம்மா செல்லம் என்ற படத்தில் நடித்தார். பல மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

actor bala with second wife

2010ல் பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

2021ல் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருடனும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாலாவின் முதல் மனைவி அம்ருதா, கடந்த வாரம் காவல் நிலையத்தில் பாலா தன்னையும், தன்னுடைய மகளையும் தனமும் வழிமறித்து தொல்லை கொடுப்பதாக புகார் கொடுத்தார்.

சமந்தாவின் புதிய பாய் ஃபிரென்டா? யார் இந்த நபர் - வைரலாகும் வீடியோ

சமந்தாவின் புதிய பாய் ஃபிரென்டா? யார் இந்த நபர் - வைரலாகும் வீடியோ

3வது திருமணம்

அதன் அடிப்படையில், பாலா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலா, தன்னிடம் ரூ.250 கோடி சொத்து இருக்கிறது. தனது குடும்ப சொத்தில் இருந்து பங்காக இந்த ரூ.250 கோடி வந்தது.

நான் சொல்றவருதான் வாரிசு - 3வது திருமணம் செய்ய போகும் நடிகர்! | Actor Bala Get Married Third Time Soon

இந்த சொத்து குறித்த அறிவிப்பு வெளியானதும் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருகிறது. இதனால், கேரளாவை விட்டு வேறு எங்காவது சென்றுவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்.

மூன்றாவது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன். தனது ரூ.250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு என்று தெரிவித்துள்ளார்.