வீட்டில் AC இருக்கா? இனி 20 டிகிரிக்கு கீழ் போகாது - மத்திய அரசு மாஸ்டர் ப்ளாண்

Government Of India Weather
By Sumathi Jun 11, 2025 05:33 AM GMT
Report

ஏசி உபயோகம் குறித்து முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

ஏசி உபயோகம்

கோடை காலங்களில் ஏசிக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதில் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 16 அல்லது 17 டிகிரி செல்சியஸ் என செட் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.

AC

இந்நிலையில் மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஏசிக்களில் குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வைக்க முடியும் வகையில் மாற்றப்படவுள்ளது. இதன்மூலம் மின்சார சேமிப்பில் முக்கியமான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

அதன்படி வீட்டு உபயோகப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மின்சாரத்துறை அமைச்சர் மனோகர் லால், புதிதாக வரும் ஏசிக்களில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை லிமிட்டில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

7 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு

7 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு

மத்திய அமைச்சர் தகவல்

அதன்படி, குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை இருக்கும். ரிமோட் மூலம் இதற்கு இடைப்பட்ட வெப்பநிலையை தான் வைக்க முடியும். வீடுகள், ஓட்டல்கள், கார்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த ஏசி வெப்பநிலை செட்டிங் பொருந்தும்.

அமைச்சர் மனோகர் லால்

இந்த திட்டம் தற்போது தொடக்க நிலையில் தான் உள்ளது. அடுத்தடுத்து பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு நடவடிக்கைகள் மூலம் செயல்படுத்தப்படும். மின் பயன்பாடு என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. எனவே மின் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதன் ஒருபகுதியாக ஏசிக்களில் வெப்பநிலை செட்டிங்கில் மாற்றம் வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.