சனாதனத்தை எதிர்த்தால் தான் தோல்வி ... முன்னாள் கிரிக்கெட் வீரர் விளாசல்!!
நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் 3-இல் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
4 மாநில தேர்தல்
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் தனி பெருபான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் தெலுங்கானா மாநிலத்தில் முதல் முறை ஆட்சியை பிடித்துள்ளது.
அதன் காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் இது பெரும் புத்துணர்ச்சியை பாஜகவிற்கு அளிக்கும் என அக்கட்சி தொண்டர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றார்.
இந்நிலையில், தான் காங்கிரஸ் தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சனாதன தர்மத்தை துஷ்பிரயோகம் செய்வது அதன் விளைவுகளை ஏற்படுத்தும்.
Abusing Sanatana Dharma was bound to have it’s consequences .
— Venkatesh Prasad (@venkateshprasad) December 3, 2023
Many congratulations to the BJP for a landslide victory. Just another testimony of the amazing leadership of Prime Minister @narendramodi ji & @AmitShah & great work by the party cadre at grassroot levels…
மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள். பிரதமரின் அற்புதமான தலைமைக்கு மற்றொரு சான்று என அவர் தெரிவித்துள்ளார்.
இது நேரடியாக உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்கும் விஷயமாகும். திமுகவின் சனாதன கருத்தை இது குறிப்பிடுகிறது என்ற காரணத்தால், இதனை தற்போது திமுகவை சேர்ந்தவர்கள் ட்விட்டர் தளத்தில் விமர்சிக்க துவங்கிவிட்டனர்.