கிரிக்கெட் வீரர்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வார்களா..? பிரபல வீரர் பளீச் பதில்!

Kolkata Knight Riders Cricket Indian Cricket Team Sports IPL 2024
By Jiyath Jun 08, 2024 01:21 PM GMT
Report

கிரிக்கெட் வீரர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவார்களா? என்பது குறித்து அபிஷேக் நாயர் பேசியுள்ளார்.

அபிஷேக் நாயர்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், கிரிக்கெட் வீரர்கள் தொடரின் போது உடலுறவில் ஈடுபடுவார்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வார்களா..? பிரபல வீரர் பளீச் பதில்! | Abhishek Nayar About Sex Life Of Cricketers

அதற்கு பதிலளித்த அபிஷேக் நாயர் "இந்த கேள்வியை நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் கேட்கிறீர்களா? எதிர்மறையான எண்ணத்தில் கேட்கிறீர்களா? ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் வெளிப்படையானது. உடலுறவு என்பது என்னைப் பொருத்தவரை சாதாரண விஷயம் தான்.

அவரால் முடியும்.. தோனி ஆஸி. அணியின் கேப்டனாகலாம்? இதை கவனிச்சீங்களா!

அவரால் முடியும்.. தோனி ஆஸி. அணியின் கேப்டனாகலாம்? இதை கவனிச்சீங்களா!

நெருக்கடிகள் குறையும் 

வீரருக்கு வீரர் அது மாறுபடும். ஒவ்வொரு வீரர்களும் களத்தில் கடுமையாக போராடுகிறார்கள். அவர்களுடைய மனதும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும். இந்த சூழ்நிலையில் சிலர் உடலுறவில் ஈடுபடுவார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வார்களா..? பிரபல வீரர் பளீச் பதில்! | Abhishek Nayar About Sex Life Of Cricketers

சிலர் அந்தப் பக்கமே செல்ல மாட்டார்கள். உடலுறவில் ஈடுபடாதபோது தான் கவனத்துடன் செயல்பட முடியும் என்று சில கிரிக்கெட்டர்கள் நினைப்பார்கள். உடலுறவில் ஈடுபடும் போது தங்களுக்கான நெருக்கடிகள் குறையும் என்று சிலர் நினைப்பார்கள்.

எனவே, இது தனிப்பட்ட வீரர்களைப் பொறுத்து தான் மாறுபடும். சிலருக்கு நெருக்கடிகள் அதிகமாக இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.