பீகாரில் மருத்துவரை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் நடந்த கட்டாய திருமணம் - வைரலாகும் வீடியோ
பீகார் மாநிலத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் அவருக்கு கட்டாய திருமணம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்திச் சென்று கட்டாய திருமணம்
பீகார் மாநிலம், பெகுசராய் மாவட்டத்திலிருந்து ஒரு போன் கால் வந்தது. அந்த போனில் பசு மாடு ஒன்றுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினர். இதனையடுத்து, கால்நடை மருத்துவராக பணிபுரியும் சத்யம் குமார் ஜாவ் மருத்துவம் பார்க்க சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது, மருத்துவரை கடத்தி துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது . மகனை காணவில்லை என்று தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
போலீசார் விசாரணை
மறுநாள் தந்தைக்கு செல்போனுக்கு வீடியோ ஒன்று வந்தது. அதைப் பார்த்த தந்தை அதிர்ச்சி அடைந்தார். மணக்கோலத்தில் மகனை உட்கார வைக்கப்பட்டு துப்பாக்கி முனையில் ஒரு பெண்ணுடன் கட்டாய திருமணம் நடந்திருந்தது. உடனே இது குறித்து போலீசாருக்கு தந்தை தகவல் கொடுத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது சமூகவலைத்தளங்களில் கட்டாய திருமண வீடியோ வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
#PakaduaVyah Case | #Bihar Veterinarian Kidnapped, #Forced to Marry a Woman
— ViralVdoz (@viralvdoz) June 15, 2022
On June 14, a case of #PakaduaVyah, also known as #forcedmarriage, came to light from Bihar’s #Begusarai. Satyam Kumar was allegedly #kidnapped and forced to marry a woman. Watch this video to know more. pic.twitter.com/d5fSImuKBI