வாட்டும் வெயில்; ஆவின் மோர் விற்பனை அதிகரிப்பு!

Chennai Summer Season
By Swetha Apr 24, 2024 06:44 AM GMT
Report

கோடை காலம் காரணமாக ஆவின் மோர் விற்பனை அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் கோடை வெயில் அதிகரிக்கத்துள்ளது.

ஆவின் மோர்

வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பம் தாளாமல் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் குளிர் உணவுகளை நோக்கி மக்கள் திரண்டுள்ளனர். அந்த வகையில் சென்னையில் ஆவின் மோர் விற்பனை அதிகரித்துள்ளது.

வாட்டும் வெயில்; ஆவின் மோர் விற்பனை அதிகரிப்பு! | Aavins Buttermilk Sales Increase

தமிழ்நாட்டில் மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில்ஆவின் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் வாயிலாக தினந்தோறும் 26 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஏன் பால் பாக்கெட்டில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து இல்லை? பாஜகவின் கேள்விக்கு ஆவின் விளக்கம்!

ஏன் பால் பாக்கெட்டில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து இல்லை? பாஜகவின் கேள்விக்கு ஆவின் விளக்கம்!

விற்பனை அதிகரிப்பு

பால் மட்டுமின்றி தயிர், மோர், வெண்ணெய் , இனிப்பு வகைகள் உள்ளிட்டவையும் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தற்போது கோடை காலம் காரணமாக தயிர் , லஸ்ஸி , ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனையாகும்.

வாட்டும் வெயில்; ஆவின் மோர் விற்பனை அதிகரிப்பு! | Aavins Buttermilk Sales Increase

அதன்படி சென்னையில் தினசரி இதுவரை 40,000 ஆவின் மோர் பாட்டில்கள் விற்பனையாகின்றன என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 200 மில்லி ஆவின் மோர் பாட்டில் 12 ரூபாய்க்கும், 200 மில்லி ஆவின் மோர் பாக்கெட் ரூபாய் 8க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு 25 சதவீதம் ஆவின் மோர் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அம்பத்தூர் ஆவின் பால்பண்ணையில் மோர் பாட்டில், மோர் பாக்கெட் தயாரித்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.