நள்ளிரவில் பர்த்டே பார்ட்டி - ஆண் நண்பர்களால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
ஆண் நண்பர்களை அழைத்து பார்ட்டி கொடுத்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
பர்த்டே பார்ட்டி
மகாராஷ்டிரா, புனே பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். இவர் தனது தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் தனக்கு நெருக்கமான மூன்று ஆண் நண்பர்களையும் இரண்டு பெண் நண்பர்களையும் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பார்ட்டியில் அந்த இளம் பெண்ணை கூட்டு பாலில் வன்கொடுமை செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே அந்த ஆண் நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
அதன்படியே அந்த இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து மூன்று வாலிபர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மறுநாள், சுயநினைவு திரும்பி எழுந்த பெண் இதுகுறித்து தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

அதன்பின் போலீஸில் புகாரளித்துள்ளார். தொடர்ந்து மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.