அழுகிய கணவர் உடலுடன் நான்கு நாட்கள் இருந்த மனைவி-கொடூர சம்பவம்!

Attempted Murder India
By Sumathi Jul 04, 2022 05:30 AM GMT
Report

மாரடைப்பால் தன் கணவர் இறந்து விட்ட நிலையில் அழுகிய உடலுடன் நான்கு நாட்களாக வீட்டிற்குள்ளேயே இருந்திருக்கிறார் மனைவி.இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர்

மும்பையில் நவி மும்பை பன்வெல் பகுதி. இப்பகுதியில் பியானர் குடியிருப்பில் பாபா அணுஆராய்ச்சி கழக ஓய்வு பெற்ற எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் முஸ்தாக் நாயக் (71) தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

mumbai

இவரது மனைவி நஸ்ரின் (64) ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. கணவனும் மனைவி மட்டுமே இந்த குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் உறவினர்கள் யாரிடமும் பழகாமல் இருந்துள்ளனர்.

அழுகிய நிலை

ஊரார் யாரிடமும் பழகாமல் தனித்தே வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர்களின் வீடு திறக்கப்படாமலேயே இருந்திருக்கிறது.

அழுகிய கணவர் உடலுடன் நான்கு நாட்கள் இருந்த மனைவி-கொடூர சம்பவம்! | A Wife With A Rotten Husband Body For Four Days

அந்த குடியிருப்பின் முன்னாள் சேர்மன் வீட்டிற்குள் சென்று பார்த்திருக்கிறார். அப்போது முதியவர் முஸ்தாக் அழுகிய நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார்.

மின் இணைப்பு

உயிரிழந்த கணவருடன் அவரது மனைவி நான்கு நாட்களாக இருந்திருக்கிறார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

விசாரணையில் மாரடைப்பால் அவர் உயிரிழந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. யாருடனும் பழகாமல் இருக்கும் அந்த தம்பதியினர் ஜன்னல், கதவு என்று எல்லாவற்றையும் பூட்டி வைத்திருப்பதால் துர்நாற்றம் வெளியே வராமல் இருந்திருக்கிறது.

மின் இணைப்பு மின் கட்டணம் செலுத்தாமல் இருந்ததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்திருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. 

29வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை.. அரங்கேறிய பரிதாபம்?