சாலையில் சென்ற கார் மீது மரம் விழுந்து விபத்து - ஒருவர் பலி..!

Tamil nadu Chennai
By Thahir Jun 24, 2022 04:18 PM GMT
Report

சென்னையில் கே.கே நகரில் கார் மீது மரம் விழுந்து வங்கி மேலாளர் உயிரிழப்பு.

சென்னை நகர் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் கே.கே நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது.

கார் மீது மரம் விழுந்து விபத்து 

அப்போது வங்கியில் வேலை பார்க்கக் கூடிய வாணி கபிலன் என்பவரும், அவரது தங்கை எழிலரசி என்பவரும் காரில் சென்றுள்ளனர்.

சாலையில் சென்ற கார் மீது மரம் விழுந்து விபத்து - ஒருவர் பலி..! | A Tree Fell On A Car On The Road

கார்த்திக் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று சாலை ஓரம் இருந்த மரம் காரின் பின் பக்கமாக சாய்ந்து விழுந்தது.

இதில் காரின் பின் இருக்கையில் இருந்த வாணி கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எழிலரசி மற்றும் கார் ஓட்டுனர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.