பெண்ணின் காதில் கூடுகட்டி குடும்பம் நடத்திய சிலந்தி - மருத்துவர்கள் அதிர்ச்சி
சீனாவில் பெண்ணின் காதுக்குள் சிலந்து ஒன்று கூடுகட்டி குடும்பம் நடத்தி வந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காது வலியால் துடித்த பெண்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த 20 ஆம் தேதியன்று பெண் ஒருவர் தனது காதுக்குள் சத்தம் வந்து கொண்டே இருப்பதாக கூறி ஹுய்டோங் கவுண்டி மக்கள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணின் காதை பரிசோதித்த மருத்துவர்கள் காதுக்குள் எதுவும் இல்லை என்றும் காது மிகவும் சுத்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருந்த போதும் அந்த பெண் தனக்கு காதில் வலி அதிகம் இருப்பதாகவும் மீண்டும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் மருத்துவர்கள் கேமரா பொருத்திய எண்டோஸ்கோபி மூலம் பரிசோதனை செய்துள்ளனர்.
கூடுகட்டி குடும்பம் நடத்திய சிலந்தி
அப்போது காதில் செவிப்பறை வரை ஒன்றும் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் சிறிது நேரம் கழித்து செவிப்பறை அசைவது தெரியவந்துள்ளது.
பின்னர் தான் செவிப்பறை நிஜமானது இல்லை என்றும் அது போலி செவிப்பறை என்பதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
போலி செவிப்பறையை ஒதுக்கிவிட்டு பார்க்கும் போது பெண்ணின் காதுக்குள் சிலந்தி ஒன்று கூடுகட்டி குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
மருத்துவர்கள் கூறுகையில், விஷ தன்மை இல்லாத சிலந்தி என்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.