1 ரூபாய் ஊறுகாய்க்காக நடந்த கொலை வெறிதாக்குதல் - ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம்!

Chennai Tamil Nadu Police Crime
By Vidhya Senthil Oct 09, 2024 05:50 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் கேட்டு மளிகை கடைக்காரர் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை 

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அசாருதீன் மற்றும் முகமத் உசேன் இருவரும் அதே பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

chennai

இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த கலையரசன், வினோத் உள்ளிட்டோர் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் கேட்டதாகவும், ஆனால் ஒரு ரூபாய் பாக்கெட் இல்லை எனவும், ஐந்து ரூபாய் ஊறுகாய் பாக்கெட் மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார்.

சிறுவனுக்கு அட்வைஸ் செய்த இளைஞர்..நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம் - நடந்தது என்ன?

சிறுவனுக்கு அட்வைஸ் செய்த இளைஞர்..நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம் - நடந்தது என்ன?

இதனைக் கேட்ட வினோத் ஆத்திரமடைந்து மளிகை கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டுள்ளார். அப்போது மளிகை கடைக்காரர் அசாருதீன் என்பவரை வினோத் கத்தியால் வெட்டியுள்ளார்.

 தாக்குதல் 

இதில் காயமடைந்த அசாருதீன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கோடம்பாக்கம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

kodampakkam

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், தலைமறைவாக உள்ள வினோத் மற்றும் கலையரசன் ஆகிய இருவரையும் காவல்துறை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.