சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - பாலியல் வன்கொடுமை செய்து கால்வாயில் வீசிய 8ம் வகுப்பு சிறுவர்கள்!
8 வயது சிறுமியை சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
பாலியல் வன்கொடுமை
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது பள்ளி சிறுமி கடந்த ஞாயிறு விடுமுறையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.ஆனால் நெடுநேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பத்தற்றமடைந்த தந்தை முச்சுமாரி உறவினர்கள் வீடுகளில் தேடி இருக்கிறார்.
இருப்பினும் எங்கும் சிறுமியை காணவில்லை. இதையடுத்து, சிறுமியின் தந்தை முச்சுமாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், சிறுமியை பல இடங்களில் தேடி கிடைக்காததால் போலீசார் மோப்ப நாயை வரவழைத்தனர்.
8ம் வகுப்பு சிறுவர்கள்
அந்த மோப்ப நாய் அப்பகுதியை சேர்ந்த 6 மற்றும் 7 வகுப்பு படிக்கும் 12, 13 வயது வயதுடைய மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றது. சந்தேகமடைந்த போலீசார் அம்மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு.
கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை முச்சுமரி அணைக்கு அருகே ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டதாகவும்,
இதுகுறித்து சிறுமி வெளியே சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் சிறுமியை கொலை செய்து உடலை பாசன கால்வாயில் வீசியதாகவும் கைதான சிறுவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்தனர். அமராவதியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள முச்சுமரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை.