பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து டார்ச்சர் செய்த எம்.எல்.ஏ - கடிதம் எழுதி தற்கொலைக்கு முயற்சி!

Sexual harassment Telangana
By Vinothini Jun 30, 2023 09:19 AM GMT
Report

 தெலுங்கானாவில் எம்.எல்.ஏ ஒரு பெண்ணிற்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததால் அவர் தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் அதிகாரி

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற பெண் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. துர்க்கம் சின்னய்யா என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

a-female-officer-harrassed-by-mla

அந்த பெண் சில நாட்களுக்கு முன்பு இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளிதர். அதன்பின்னரும் எம்.எல்.ஏ தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதும், அவர் அழைத்த இடத்திற்கு வரவில்லை என்றால் அவரது ஆட்களை விட்டு அவரை மிரட்டுவதாகவும் இருந்துள்ளார்.

தற்கொலை

இந்நிலையில், அந்த பெண் டெல்லி தேசிய மகளிர் ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்பொழுது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தார். அதன்பிறகு, அந்த எம்.எல்.ஏ தொடர்ந்து தொல்லை கொடுப்பதும் கொலை மிரட்டல் விடுவதுமாக இருந்துள்ளார்.

a-female-officer-harrassed-by-mla

இதனால் அந்த பெண் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வதற்காக அதிகமான மாத்திரைகளை விழுங்கியுள்ளார். நேற்று ஐதராபாத் ஜூப்ளிகில்சில் ஒரு அம்மன் கோவில் அருகே பெண் அதிகாரி மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.