தெலங்கானா அரசியல் : சந்திரசேகராவை எதிர்க்கும் ஜெகன்மோகனின் தங்கை வெற்றி யாருக்கு ?

Telangana
By Irumporai Feb 23, 2023 05:23 AM GMT
Report

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் தங்கை ஒய்.எஸ் .ஷர்மிளா தீவிர அனல் பறக்கும் பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

தெலுங்கானா அரசியல்

தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதிக்கும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுக்குமிடையே மோதல் போக்கு அதிகரித்திருப்பது நாடறிந்த விஷயம். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பா.ஜ.க-வினருக்கு கடும் எதிர்ப்பு கொடுப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். பதிலுக்கு தெலங்கானா வரும்போதெல்லாம், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சந்திரசேகர் ராவை வம்புக்கிழுக்காமல் டெல்லி திரும்புவதில்லை.  

யார் இந்த ஷர்மிளா 

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் தனியாகக் களமிறங்கிக் கட்சி தொடங்கியிருக்கிறார். 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், `ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா' என்ற கட்சியை அங்கு தொடங்கினார்.

2022 ஜூலையில், ஜெகன்மோகனின் அம்மா விஜயலட்சுமி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிலிருந்து விலகி, தன் மகளின் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானாவில் இணைந்தார். கட்சிக்குள் அம்மாவுக்கும் தங்கைக்கும் ஜெகன் முக்கியத்துவம் அளிக்காததால், ஆந்திராவிலிருந்து வெளியேறி இருவரும் தெலங்கானாவில் அரசியல் செய்துவருதாக அப்போது கூறப்பட்டது.

தெலங்கானா அரசியல் : சந்திரசேகராவை எதிர்க்கும் ஜெகன்மோகனின் தங்கை வெற்றி யாருக்கு ? | Telangana Politics In Tamil

தெலங்கானாவில் தனக்கான ஆதரவைத் திரட்ட கடந்த ஆண்டிலிருந்தே பாதயாத்திரையை மேற்கொண்டுவருகிறார் ஷர்மிளா. சட்டமன்றத் தொகுதிவாரியாக சென்று, சந்திரசேகர் ராவ்வின் பி.ஆர்.எஸ்-ஐ எதிர்த்து பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு இறுதியில், தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், காரசாரமான கருத்துகளை முன்வைத்து கே.சி.ஆரை எதிர்த்து வருகிறார் ஷர்மிளா. அவர் பாதயாத்திரை நடத்த மாநில காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றம் சென்று வெற்றிகண்டார் ஷர்மிளா. 


இந்த நிலையில், பிப்ரவரி 18-ம் தேதி மஹபூபாபாத் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார் ஷர்மிளா. அன்று மாலை அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், தெலங்கானாவில் இந்திய அரசியலமைப்பு பின்பற்றப்படுவதில்லை. கே.சி.ஆர் ஓர் சர்வாதிகாரி. இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக இருக்கிறது தெலங்கானா. கே.சி.ஆர்தான் தாலிபன் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தெலங்கானா அரசியல் : சந்திரசேகராவை எதிர்க்கும் ஜெகன்மோகனின் தங்கை வெற்றி யாருக்கு ? | Telangana Politics In Tamil

மேலும், மஹபூபாபாத் பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ சங்கர் நாயக்கையும், அவரின் மனைவியையும் ஷர்மிளா தகாத வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது இரண்டு முறை ஷர்மிளா கைதுசெய்யப்பட்டும், தங்கைக்கும், அம்மாவுக்கும் ஆதரவாக ஜெகன் வாய்திறக்காதது பெரும் சலசலப்பை உண்டாகியிருக்கிறது. `2014 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்று இடங்களில் மட்டுமே வென்றது ஜெகனின் கட்சி.

ஆட்சியை பிடிப்பாரா ஷர்மிளா

அதன் பிறகு, அந்தக் கட்சி ஆந்திராவில் மட்டுமே முழு கவனம் செலுத்திவருகிறது. இதனால்தான், தெலங்கானாவில் நேரடியாகக் கால்பதிக்காமல், தங்கை மூலம் புதுக் கட்சி தொடங்கியிருக்கிறார் ஜெகன். அவரின் பி-டீம்தான் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா' என்று சொல்லப்படுகிறது.

மேலும், சந்திரசேகர் ராவ்வை வீழ்த்த பா.ஜ.க-வின் பி-டீமாக களமிறக்கப்பட்டிருக்கிறார் ஷர்மிளா. தெலங்கானா மாநில பா.ஜ.க தலைவர்கள் எழுதிக்கொடுப்பதைத்தான் அவர் பேசுகிறார்' என்ற குற்றச்சாட்டும் அவர்மீது முன்வைக்கப்படுகிறது.

ஆனால், இதையெல்லாம் ஷர்மிளா தொடர்ந்து மறுத்துவருகிறார். ஆந்திர அரசின் முகமாக இருந்த சந்திரபாபு நாயுடுவை மறந்து ஜெகனுக்கு ஆதரவு எப்படி பெருகியது போல தெலுங்கானாவில் ஜெகனின் தங்கைக்கு ஆதரவு பெருகுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்