25 சமோசாவை ஆர்டர் செய்த டாக்டர் - மொத்தம் ரூ1.4 லட்சத்தை நொடியில் இழந்த சோகம்!
மும்பையில் டாக்டர் ஒருவர் 25 சமோசாவை ஆர்டர் செய்து ரூ1.4 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர்
மும்பையில் கடந்த வாரம் 27 வயதான டாக்டர் ஒருவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது சமோசா வாங்க நினைத்த அவர் சியான் என்ற பகுதியில் உள்ள பிரபல குருகிருபா ஓட்டலுக்கு போன் செய்து 25 சமோசா ஆர்டர் செய்தார்.
அப்பொழுது மருத்துவரிடம் பேசிய இவர் சமோசாவுக்கு ரூ.1,500 என்று கூறி, அதற்கான லிங்கை வாட்ஸ் அப்-ல் அனுப்பியுள்ளார். அந்த லிங்க் மூலமாக இவர் பணம் செலுத்தியுள்ளார்.
மோசடி
இந்நிலையில், மருத்துவரிடம் பேசியவர், "எங்கள் கணக்கில் பணம் வரவில்லை. நான் இப்போது உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்புகிறேன். அதை நான் அனுப்பும் லிங்கில் டைப் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
இவரும் அதன்படி செய்துள்ளார், பின்னர் இவரது வாங்கி கணக்கில் இருந்து ரூ.28,000 எடுக்கப்பட்டது, தொடர்ந்து, இவரது வாங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.1.40 லட்சம் திருடப்பட்டது. இது குறித்து மருத்துவர் போலீசிடம் புகாரளித்துள்ளார்.
அப்பொழுது விசாரணையில், சைபர் மோசடி குழுவினர் அந்த ஹோட்டலின் நம்பரை மாற்றி அவர்களது நம்பரை பதிவிட்டுள்ளார். இதன்மூலம் கூகுல் பே-வில் பணம் செலுத்திய அனைவரிடமும் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும், இந்த மோசடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.