ரயிலில் தவறி விழுந்த சிறுவன் - தாயின் கண் முன்னே நேர்ந்த கொடூரம்!
திருமங்கலம் அருகே ரயில் சக்கரத்தில் சிக்கிய11 வயது சிறுவனின் கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள பெரிய ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மருது பாண்டி- இருளாகி தம்பதியினர். தம்பதியினர் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர் . இவர்களுக்கு வாண்டையார் எனும் 11 வயது மகன் உள்ளார்.
இவர் பெருங்குடியில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில், இருளாயி தனது தாய் வீட்டிற்கு மகன் வாண்டையாரோடு பொள்ளாச்சி சென்று விட்டு திருச்செந்தூர் ரயிலில் திருமங்கலத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.
அப்போது, திருமங்கலம் ரயில்வே நிலையத்துக்குக் காலை 11 மணியளவில் ரயில் வந்துள்ளது.இதைத்தொடர்ந்து, பயணிகள் அனைவரும் இறங்கியபோது, சிறுவன் கருப்பு வாண்டையாரும் ரயிலிலிருந்து இறங்க முயன்றுள்ளார்.
விபத்து
அப்போது, திடீரென ரயில் கிளம்பியதால் வாண்டையார் தவறி தண்டவாளத்தில் விழுந்தபோது ரயில் சக்கரத்தில் சிறுவனின் வலது கால் சிக்கியது.இதனைக் கண்ட அங்கிருந்த பயணிகள் பதறிப்போய் கூச்சலிட்டனர்.
இதையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரயிலின் சக்கரத்தில் சிக்கியதால் மிகவும் சேதமடைந்ததால் சிறுவனை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சையின் மூலமாக மருத்துவர்கள் சிறுவனின் வலது காலை அகற்றினர்.