கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து; 9-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல் - அதான் விஷயமா..?
கல்லூரி மாணவியை, 9ம் வகுப்பு மாணவன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்திக்குத்து
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பரதேசிப்பட்டியில், வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அப்போது அதனை தடுக்க முயன்ற அந்த மாணவியின் பாட்டியையும் சிறுவன் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெறிச்செயல்
முதற்கட்ட விசாரணையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் கல்லூரி மாணவி வீட்டில், அந்த சிறுவன் செல்போன் திருட முயற்சி செய்ததாகவும், அதனை கண்டித்ததால் ஆத்திரத்தில் இந்த தாக்குதலை சிறுவன் நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
கல்லூரி மாணவியை 9ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.