பள்ளிக்குச் சென்ற 9 வயது சிறுவன்..கடித்து குதறிய தெரு நாய் - துடிதுடித்து உயிரிழந்த கொடூரம்!

Crime Death Krishnagiri
By Vidhya Senthil Feb 10, 2025 08:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

தெருநாய் கடித்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள சித்தேகவுண்டனூரை சேர்ந்தவர் மாதேஷ். கட்டி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு நந்திஷ் என்ற 9 வயதில் மகன் உள்ளார்.இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளிக்குச் சென்ற 9 வயது சிறுவன்..கடித்து குதறிய தெரு நாய் - துடிதுடித்து உயிரிழந்த கொடூரம்! | 9 Year Old Boy Dies After Being Bitten Stray Dog

இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனாவால் உயிரிழந்தார். இந்த நிலையில் நந்திஷ் தனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.கடந்த 5 நாட்களுக்கு முன்னர் பள்ளிக்குச் செல்லும்போது நாய் கடித்ததை, வீட்டில் தெரிவிக்காமலிருந்துள்ளார்.

காணாமல் போன பள்ளி மாணவிகள்..சடலமாக மீட்கப்பட்ட கொடூரம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்!

காணாமல் போன பள்ளி மாணவிகள்..சடலமாக மீட்கப்பட்ட கொடூரம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்!

இந்த சூழலில், சனிக்கிழமை நந்திஷூக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர்.

 9 வயது சிறுவன் 

அப்போது சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆம்புலன்சில் சிறுவனின் உயிர் பிரிந்தது.

பள்ளிக்குச் சென்ற 9 வயது சிறுவன்..கடித்து குதறிய தெரு நாய் - துடிதுடித்து உயிரிழந்த கொடூரம்! | 9 Year Old Boy Dies After Being Bitten Stray Dog

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெருநாய் கடித்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.