8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள் - சென்னையில் கொடூரம்!
13 வயது சிறுமியை அண்ணன் முறையிலான உறவினர்களே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கர்ப்பம்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் வசித்து வருகின்றனர். இவர்களின் 13 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ராயபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
வழக்குப்பதிவு
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அண்ணன் முறையிலான உறவினர்களே மாணவியை சீரழித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தாயின் அக்கா மகனான மனோஜ், சிறுமியின் தந்தையின் அண்ணன் மகன்களான அஜய்,
கண்ணா பாண்டா ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மனோஜ் என்பவரை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
