சமூக வலைதளத்தில் மலர்ந்த காதல் - 80 வயது முதியவரை கரம் பிடித்த 34 வயது பெண்!

India Marriage Madhya Pradesh Social Media
By Jiyath Apr 03, 2024 06:16 AM GMT
Report

சமூக வலைதளத்தில் மலர்ந்த காதலால் 80 வயது முதியவரை 34 வயது பெண் திருமணம் செய்துகொண்டுள்ளார். 

சமூக வலைத்தள பழக்கம்

மத்தியப் பிரதேச மாநிலம் அகர் மாவட்டத்தின் மகாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் பலுராம் பக்கிரி (80). இந்த முதியவருக்கு சமூக வலைத்தளம் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த ஷீலா இங்கிள் (34) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் மலர்ந்த காதல் - 80 வயது முதியவரை கரம் பிடித்த 34 வயது பெண்! | 80 Year Old Man Ties Knot With 34 Year Old Bride

இந்த சமூக வலைத்தள பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இருவருக்கும் இடையில் வயது வித்தியாசம் அதிகம் என்றபோதிலும், அவர்கள் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நடக்கும் அதிசயம்; இனி 2095ல் தான் - மிஸ் பண்ணிடாதீங்க!

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நடக்கும் அதிசயம்; இனி 2095ல் தான் - மிஸ் பண்ணிடாதீங்க!

திருமணம் 

இந்நிலையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமானது அங்குள்ள நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

சமூக வலைதளத்தில் மலர்ந்த காதல் - 80 வயது முதியவரை கரம் பிடித்த 34 வயது பெண்! | 80 Year Old Man Ties Knot With 34 Year Old Bride

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த திருமணமானது இணையவாசிகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.