பெற்றோரின் அலட்சியம்... 8 மாத குழந்தையின் உயிரை பறித்த வயர் - துயர சம்பவம்!
வயரால் 8 மாத குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பச்சிளம் குழந்தை
கர்நாடக மாநிலம், உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு சானித்யா என்ற 8 மாத குழந்தை உள்ளது, தாய் சஞ்சனா சார்ஜர் போட்டுவிட்டு சுவிட்ச் ஆப் செய்யாமல் விட்டுவிட்டர்.
அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த அந்த குழந்தை வயரை கடித்துள்ளார். அப்பொழுது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.
பரிதாப பலி
இந்நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அந்த குழந்தையின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளார். இந்த தகவலை கேட்ட அந்த குழந்தையின் தந்தை பதறிப்போய் ஓடிவந்தார், அப்பொழுது குழந்தையின் உடலை பார்த்து அங்கேயே மயங்கி விழுந்தார்.
பின்னர், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.