கழிவறையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 72 வயது முதியவர் கொடூரம்
72 வயது முதியவர் ஒரு 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ராஜஸ்தான், கனோட் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்லால் ரேகார்(72). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனியாக இருந்ததை கவனித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள பள்ளி ஒன்றின் கழிவறையில் சிறுமியை பலவந்தமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன்பின், சிறுமி அழுதபடி பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர் மோகன்லாலை பிடித்து ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
முதியவர் கொடூரம்
இதற்கிடையில் சம்பவ இடம் விரைந்த போலீஸார் மோகன்லாலை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் உறவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.