கலவர காடான மணிப்பூர், அத்துமீறி நுழைந்த 718 மியான்மர்கள் - தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவு!
மணிப்பூரில் ஆவணங்கள் இல்லமால் 718 மியான்மர்கள் உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கலவரம்
மணிப்பூரில் சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிலரை மைத்தேயி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடத்திச் சென்றனர். அவர்கள் 2 பெண்களை ஆடையின்றி இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், மேலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கண்டித்து பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது நாட்டையே உலுக்கிய சம்பவமாக பார்க்கப்பட்டது.
மியான்மர்கள்
இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் சந்தால் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 718 மியான்மர் நாட்டவர் சட்டவிரோதமாக ஊடுருவி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2 நாட்களில் 718 பேர் ஊடுருவி இருப்பது குறித்து மணிப்பூர் மாநில அரசும், அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றனர்.
மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து சட்டவிரோதமாக ஊடுருவிய 718 பேரும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரால் வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.