கள்ளச்சாராயம் குடித்த 7 பேர் பலி; தீவிர விசாரணை - அதிர்ச்சி சம்பவம்!
கள்ளச்சாராயம் குடித்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராயம்
ஹரியானா, யமுனா நகர் பகுதியில் மது அருந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.
உடனே இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுகுறித்து பேசிய யமுனா நகர் காவல்துறை கண்காணிப்பாளர் கங்கா ராம் புனியா, கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்,
7 பேர் பலி
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கிடையில், கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பழைய தொழிற்சாலை ஒன்றை கண்டறிந்துள்ள போலீஸார்,
அங்கு சாராயம் காய்ச்சி விற்றவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.