சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு - பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு!

Independence Day Tamil nadu
By Vidhya Senthil Aug 09, 2024 06:08 AM GMT
Report

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15 

நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மேலும்,சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு - பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு! | 7 Layer Of Security At Chennai Airport

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் ,சுதந்திர தின விழாவை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் பயணிகளுக்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் 55,000 பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பல்வேறு துறைகளில் 55,000 பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 

 7 அடுக்கு பாதுகாப்பு

உள்நாட்டு விமான பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச விமான பயணிகள் மூன்றரை மணி நேரமும் முன்னதாகவும் வர வேண்டும். இன்று அதிகாலையில் இருந்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு - பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு! | 7 Layer Of Security At Chennai Airport

இந்த கட்டுப்பாடுகள் ஆக.20 நள்ளிரவு வரை 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும். பயணிகள் திரவப் பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.