ரூ.1000 மகளிர் உரிமை தொகை பெறாத பெண்கள் என்ன செய்வது? 7 லட்சம் பேர் மேல்முறையீடு!

M K Stalin DMK
By Vinothini Oct 06, 2023 09:59 AM GMT
Report

மகளிர் உரிமை தொகை பெறாத பெண்கள் மேல் முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உரிமை தொகை

தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார்.

7-lakh-appeals-for-women-rights-scheme

ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் விண்ணப்பிக்கும்பொழுது பல பெண்கள் நிராகரிக்கப்பட்டனர். அவர்களுக்காக மேலும் விண்ணப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

கட்டுமான பணி ஆய்வு.. திடீரென பள்ளத்தில் விழுந்த அதிகாரி, நூலிழையில் தப்பிய அமைச்சர் - பரபரப்பு!

கட்டுமான பணி ஆய்வு.. திடீரென பள்ளத்தில் விழுந்த அதிகாரி, நூலிழையில் தப்பிய அமைச்சர் - பரபரப்பு!

மேல்முறையீடு

இந்நிலையில், இ-சேவை மையங்களில் பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வந்தனர். நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். தற்பொழுது பெண்களுக்கு ஏன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று விளக்கமளித்து வருகின்றனர். தவறாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டது.

7-lakh-appeals-for-women-rights-scheme

இதனால் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர். தற்பொழுது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.