7 தீவுகளின் தொகுப்பு; வரதட்சனையாக வழங்கப்பட்ட பம்பாய் - மும்பை நகரமாக மாறியது எப்படி தெரியுமா?
பம்பாய், மும்பை நகரமாக மாறிய சுவாரஸ்ய கதை தெரியுமா?
பம்பாய்
மும்பை நகரம், முன்பு பம்பாய் என்று அழைக்கப்பட்டது. பம்பாய் தீவு, பரேல், மசகான், மாஹிம், கொலாபா, வொர்லி மற்றும் ஓல்ட் வுமன்ஸ் தீவு ஆகிய ஏழு தீவுகள் அரபிக்கடல் ஓரம் அடுத்தடுத்து அமைந்திருந்தது.
வணிகம் செய்ய வந்த போர்ச்சுகீசியர்கள் பம்பாய் தீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 1662 ஆம் ஆண்டில், போர்ச்சுகல் மன்னரின் மகளான பிரகன்சாவின் இளவரசி கேத்தரின் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் என்பவருடன் திருமணம் செய்து கொண்டார்.
நகரமயமாக்கல்
வரதட்சணையாக, பம்பாய் தீவு பிரித்தானிய இளவரசருக்கு வழங்கப்பட்டது. போர்த்துகீசியர்கள் ஏற்கனவே மும்பையை ஒரு பெரிய துறைமுகமாக நிறுவியிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், மும்பை, நகரமயமாக்கலின் அடிப்படையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டது.
மும்பை என்ற பெயர் கோலி சமூகத்தின் புரவலர் இந்து தெய்வமான மும்பாதேவி என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. தாய் என்று பொருள்படும் ஐ என்ற சொல் சேர்க்கப்பட்டு மும்பை ஆனது. ஆசியாவின் பெரிய அந்நிய செலாவணி சந்தை இங்கு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.