கலை நிகழ்ச்சிக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - திருப்பூரில் 7 பேர் கைது!

Tamil nadu Sexual harassment Crime Tiruppur
By Jiyath Mar 13, 2024 09:52 AM GMT
Report

சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

17 வயது சிறுமி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வீரக்குமாரசாமி கோவிலில் தேரோட்டத் திருவிழா கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழாவை ஒட்டி அங்கு நடைபெற்ற காலை நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர்.

கலை நிகழ்ச்சிக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - திருப்பூரில் 7 பேர் கைது! | 7 Arrested In Sexual Assault Minor Girl Vellakoil

அந்தவகையில் அதே பகுதியைச் சேர்ந்த 17-வயது சிறுமியும், அவரது தாயும் வந்துள்ளனர். காலை நிகழ்ச்சி முடிய காலதாமதமானதால், அவரின் தோழியுடன் விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், தாய் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை.

87 வயது மாமனாரை கொடூரமாக தாக்கி, தள்ளிவிட்ட மருமகள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

87 வயது மாமனாரை கொடூரமாக தாக்கி, தள்ளிவிட்ட மருமகள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

பாலியல் வன்கொடுமை 

இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த சிறுமியிடம் தாய் விசாரித்த போது, நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வரும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும், காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பலும் தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

கலை நிகழ்ச்சிக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - திருப்பூரில் 7 பேர் கைது! | 7 Arrested In Sexual Assault Minor Girl Vellakoil

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பிரபாகர் (32), மணிகண்டன் (29) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

பின்னர் தினேஷ், சதிஷ், நவீன்குமார், நந்தகுமார், பாலசுப்பிரமணியன் ஆகிய 5 போரையும் கைது செய்து திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில், தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார், தீவிரமாக தேடி வருகின்றனர்.