87 வயது மாமனாரை கொடூரமாக தாக்கி, தள்ளிவிட்ட மருமகள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

Viral Video Karnataka India Crime
By Jiyath Mar 13, 2024 07:25 AM GMT
Report

மாமனாரை கொடூரமாகா தாக்கிய மருமகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

கொடூர தாக்குதல் 

கர்நாடக மாநிலம் மங்களூரு சேர்ந்த உமா சங்கரி என்ற பெண், தனது 87 வயது மாமனாரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் "கடந்த 9-ம் தேதி வீட்டிலிருந்த மாமனாரை நடந்து செல்ல உதவும் கைத்தடியை கொண்டு உமா சங்கரி கடுமையாக தாக்கியுள்ளார்.

87 வயது மாமனாரை கொடூரமாக தாக்கி, தள்ளிவிட்ட மருமகள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்! | Daughter In Law Who Beat Father In Law Karnataka

தொடர்ந்து தாக்கியதில் வலி தாங்க முடியாத அந்த முதியவர் அடிக்க வேண்டாம் என கெஞ்சுகிறார். ஆனால் அந்த கொடூர மருமகள் அவரை வேகமாக பிடித்து தள்ளி விட்டார்.

முதல் முயற்சியே தோல்வி - ஏவப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறிய ராக்கெட்!

முதல் முயற்சியே தோல்வி - ஏவப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறிய ராக்கெட்!

மருமகள் கைது 

இதில் அந்த முதியவர் சோபாவின் ஓரத்தில் போய் முட்டிக் கொண்டு தரையில் விழுந்தார். இருந்தும் ஆத்திரம் அடங்காத மருமகள் கோபத்துடன் முன்னும் பின்னும் நடந்து கதவைப் பூட்டி விட்டு, அவரை அடிக்க சென்றார். அந்த முதியவர் வலியால் முனங்கியபடி காணப்பட்டார்.

87 வயது மாமனாரை கொடூரமாக தாக்கி, தள்ளிவிட்ட மருமகள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்! | Daughter In Law Who Beat Father In Law Karnataka

இதில் படுகாயமடைந்த முதியவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரின் மகள் அளித்த புகாரின் பேரில் மருமகள் உமா சங்கரி கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.