பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 63 பேர் பலி?
இரண்டு பஸ்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 63 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து விபத்து
உகாண்டாவின் கிர்யான்டோங்கோ என்ற இடத்தில் குறுகிய சாலையில் எதிரெதிர் திசையில் இரண்டு பேருந்துகள் சென்று கொண்டிருந்தன.
அப்போது 2 பேருந்துகளும் முன்பு சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்ற போது நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அதில் இந்த வாகனங்களும் மோதின.
63 பேர் பலி?
இந்த விபத்தில் 63 பேர் பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில், படுகாயமடைந்தவர்கள் சிலர் மயக்கமடைந்ததால் அவர்களை இறந்தவர்களின் கணக்கில் சேர்த்து 63 பேர் உயிரிழப்பு என போலீசார் அறிவித்தனர்.
பின் அவர்களை பரிசோனை செய்ததில் சிலர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 46 என போலீசார் அறிவித்துள்ளனர்.