பட்டியலின இளைஞர்களை ஆடை அகற்றி, சிறுநீர் கழித்து வன்கொடுமை - கொடூர தாக்குதல்!

Crime Tirunelveli
By Vinothini Nov 02, 2023 05:28 AM GMT
Report

இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல்

திருநெல்வேலி, மணிமூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (21). இவரது உறவினர் சேகர் மகன் மாரியப்பன் (19). இருவரும் தொழிலாளிகள், இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

6-youths-attacked-and-urinanted-on-2-youngsters

அப்பொழுது அந்த வழியாக மது அருந்தி வந்தவர்கள் இவர்களை வழிமறித்து அவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்ததாகவும், அவர்களை மிரட்டி 2 செல்போன்கள், ரூ.5 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலில் இருந்து தப்பிய இவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

'என்னை காதலிங்க' - 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்!

'என்னை காதலிங்க' - 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்!

போலீஸ் விசாரணை

இந்நிலையில், இந்த இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணையை மேற்கொண்டனர். மேலும், பட்டியலின இளைஞர்கள் இருவரின் சாதியைச் சொல்லித் திட்டியது, அவர்கள் மீது சிறுநீர் கழித்து,

arrest

கொடூரமாகத் தாக்கியது தொடர்பாக, தாழையூத்து பொன்னுமணி (25), திருமலைக்கொழுந்துபுரம் நல்லமுத்து(21), ஆயிரம்(19), ராமர்(22), சிவா(22), லட்சுமணன் (20) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.