தாயின் அடிக்கு பயந்து 5வது மாடியில் இருந்து கீழே குதித்த 6 வயது சிறுவன் - அதிர்ச்சி!
சீனாவில் 6 வயது சிறுவன் தனது தாயின் அடிக்கு பயந்து மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன்
சீன நாட்டில், அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் 6 வயது சிறுவனை அவரது தாய் அடித்துள்ளார். அப்பொழுது அவர் மாடியில் னிருந்தினு கீழே குதித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. அதில் அவர் குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள வெளிப்புற ஏசி மெஷினில் இருந்து குதித்தான்.
இந்த வீடியோவை பதிவு செய்த நபரும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், 'சிறுவனை அடிக்க வேண்டாம்' என்று அந்த தாயிடம் கெஞ்சுவதும், ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே, அச்சிறுவன் திடீரென்று குதிப்பதும் பதிவாகியுள்ளது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருந்த சிறுவன் காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
விசாரணை
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் சிறுவனின் தாயிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் சிறுவன் விழுந்து விடப்போகிறான் என்ற கவலையால், அவனை உள்ளே செல்லும்படி கூறி வற்புறுத்தவே அவனது தாயார் அவனை தாக்கியதாக கூறியுள்ளார்.
ஆனால் இந்த விளக்கம் நம்பும் படி இல்லை என்று பலரும் கூறி, அந்த சிறுவனின் தாய் மீது கோபத்தில் பேசிவருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்கள் கூறுகையில், "மாடியிலிருந்து குதிப்பதை விட அவன் தனது தாயைப் பார்த்தே அதிகம் பயந்தான்" என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். "அவனை அடிப்பதை நிறுத்து என மக்கள் கத்துகிறார்கள், ஆனால் அந்த தாயார் நிறுத்தவில்லை" என்று மற்றொரு பயனர் கூறியிருக்கிறார்.