இலங்கை சிறையிலடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேர் விடுதலை

Indian fishermen Tamil nadu Sri Lanka Rameswaram
By Sumathi Aug 04, 2022 06:38 AM GMT
Report

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படை

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21 ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்தனர்.

இலங்கை சிறையிலடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேர் விடுதலை | 6 Rameswaram Fishermen Released From Sri Lanka

அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு 6 பேரையும் அழைத்து சென்று விசாரணை செய்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மீனவர்கள் விடுதலை

அதில் அவர்களை ஆகஸ்ட் 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து 6 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், 6 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்களும் மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.