ஒரு ரசகுல்லாவுக்கா..? கல்யாண வீட்டில் அடித்துக்கொண்ட உறவினர்கள் - 6 பேர் கதி?
திருமண நிகழ்ச்சியில் ரசகுல்லா ஸ்வீட்டிற்காக மோதல் ஏற்பட்டுள்ளது.
ரசகுல்லா
உத்தரப்பிரதேசம், சம்ஷாபாத் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனையொட்டி, வந்திருந்த உறவினர்கள் உணவு விருந்தில் கலந்துக் கொண்டனர்.
அதில், பல்வேறு உணவு வகைகள், ரசகுல்லா உள்பட இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன. உணவு வகைகளில் ரசகுல்லா இனிப்பு தீர்ந்துவிட்டது.
6 பேர் காயம்
அதனைத் தொடர்ந்து, பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாருக்கு அதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கைகலப்பானது. மேலும் இரு தரப்பினரும் சரமாரியாக தங்களுக்கும் தாக்கிக் கொண்டனர். இந்த சண்டையில் 6 பேர் காயமடைந்தனர்.
உடனே தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இதே பகுதியில் திருமண நிகழ்ச்சியில் இனிப்பு வகைகள் தீர்ந்ததால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.