நாட்டை உலுக்கிய தற்கொலை படைத்தாக்குதல்; மசூதியில் குண்டுவெடிப்பு - 58 பேர் பலி!
Pakistan
Death
By Sumathi
தற்கொலைப்படை தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
குண்டுவெடிப்பு
பாகிஸ்தான், மஸ்துங் நகரில் மிலாது நபி பிறந்தநாளை ஒட்டி மக்கள் பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறை வாகனத்தின் அருகே நின்றிருந்த தற்கொலைப்படையைச் சேர்ந்த நபர்

தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். அதில் 54 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
58 பேர் பலி
இதேபோல், ஹங்கு மாவட்டத்திலும் பயங்கரவாதிகள் மசூதிக்குள் புகுந்து வெடிகுண்டை வெடிக்கச்செய்ததில், 4 பேர் உயிரிழந்தனர். 2 தற்கொலைப் படை தாக்குதல்களிலும்

சுமார் 100பேர் காயமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.