மக்களே...தாம்பரம் - செங்கல்பட்டு ரூட் போறீங்களா? நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர ரயில் ரத்து!!

Tamil nadu Government of Tamil Nadu Chennai
By Karthick Jul 22, 2024 11:25 AM GMT
Report

நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெறவிருக்கிறது.

ரயில்கள் ரத்து

இதன் காரணமாக, சென்னை கடற்கரை - சென்னை தாம்பரம் - - செங்கல்பட்டு இரு மார்க்கத்திலும் மொத்தமாக 55 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

55 trains cancelled between tambaram chengalpattu

இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது. அதில்,

  • அதிகாலை முதல் காலை 09:20 மணி வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும். 
  • மதியம் 01:00 மணியிலிருந்து இரவு 10:20 வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும். 
  • பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக, பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநில போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

55 trains cancelled between tambaram chengalpattu

  • ரயில்களின் ரத்து குறித்த விவரங்களை ரயில் நிலைய அறிவிப்பு (Station Announcement) / அறிவிப்பு பலகைகள் மூலமாகவும், மேலும் செய்தித்தாள்கள். டிவி சேனல்கள். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பயணிகள் தெரிந்துகொள்ளலாம். 
  • மேலும், சென்னை எழும்பூர், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் உதவி மையம் (Passenger Help Desk) ஏற்பாடு செய்யப்பட உள்ளது. 

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு ஊருக்கு போக டிக்கெட் கிடைக்கலை'யா? ரயில்வே துறையின் அறிவிப்பு

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு ஊருக்கு போக டிக்கெட் கிடைக்கலை'யா? ரயில்வே துறையின் அறிவிப்பு

  • கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரும் / டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகளின் உதவிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
  • பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் செங்கல்பட்டிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் இயக்கப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.