ரூ. 500 தான் கல்யாண மண்டப வாடகை; பொண்ணு வீட்டுக்கு இலவசமாம் - எங்க தெரியுமா?
ரூ.500க்கு கல்யாண மண்டபம் வாடகைக்கு விடப்படுகிறது.
கல்யாண மண்டபம்
பீகார், கயா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பாங்கேபஜாரில் பாங்கேதம் என்ற இடம் அமைந்துள்ளது. இதனை பாபா போலே நகரம் எனவும் அழைக்கின்றனர். இங்குள்ள சிவன் கோவில் மிகவும் பிரபலம். திருமணத்தின் போது இங்கு அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூடுவது வழக்கம்.
இந்நிலையில், இங்கு திருமணம் நடத்தப்படும் சமுதாய கூடத்தில் ரூ.500-க்கு திருமணத்திற்கான முன்பதிவு நடத்தப்படுகிறது. மணமகள் தரப்பிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கப்படுவதில்லை. இதற்கு அருகிலுள்ள கட்டிடத்தை தங்குவதற்காக வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
வாடகை குறைவு
முதல் தளத்தின் வராண்டாவில் 250 ரூபாயும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்திற்கு 900 ரூபாயும், சமூக கட்டிடத்திற்கு 500 ரூபாயும் செலுத்த வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடியில் 6 அறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு திருமணமான பின் திருமணச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
இதற்கு மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் இருக்க வேண்டும். திருமணத்திற்கு மணமக்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை கொண்டு வருவது அவசியம்.
1988ம் ஆண்டு முதல் இங்கு திருமணம் செய்யும் வழக்கம் துவங்கியது குறிப்பிடத்தக்கது.