5 வயது சிறுமியை வீட்டைவிட்டு துரத்திய தாய்; சீரழிக்கப்பட்டு கொலை - நடுங்கவைக்கும் சம்பவம்!
5 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
துரத்தப்பட்ட சிறுமி
அமெரிக்கா, கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் 5 வயது சிறுமி. இவர், ஒரு பெட்ரோல் பங்க் அருகே படுகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.
அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரித்து மைக்கேல் செர்ரி என்ற நபரை கைது செய்தனர்.
பாலியல் வன்கொடுமை
அதன்பின், 5 வயது சிறுமியை அவரது தாயார் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். எனவே, அப்பகுதியில் உள்ள வீடுகளில் உணவு பெற்று அவர் நாட்களை போக்கியுள்ளார்.
அதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியது தெரியவந்தது.
தொடர்ந்து, சிறுமியின் தாய் ஏற்கெனவே தன் குழந்தைகளைச் சரியாக கவனிக்காத காரணத்துக்காக, 18 மாதம் சிறைத் தண்டனை பெற்றவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.