படுக்கையில் 5 மாதக் குழந்தை - கடித்து தின்று கொன்ற வளர்ப்பு நாய்!

Telangana Death
By Sumathi May 16, 2024 03:43 AM GMT
Report

5 மாதக் குழந்தையை நாய் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கடித்துக் குதறிய நாய்

தெலங்கானா, தண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தத்து. கல் பாலிஷ் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு 5 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்த்துள்ளது.

படுக்கையில் 5 மாதக் குழந்தை - கடித்து தின்று கொன்ற வளர்ப்பு நாய்! | 5 Month Old Baby Killed By Dog Telangana

இந்நிலையில், குழந்தையை படுக்கவைத்து விட்டு தத்துவும், அவரது மனைவியும் கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், இவரது வீட்டிற்கு வந்துள்ளது.

29 பேரை கடித்து குதறிய தெரு நாய்; ரேபிஸ் இருப்பது உறுதி - பரபரப்பு தகவல்!

29 பேரை கடித்து குதறிய தெரு நாய்; ரேபிஸ் இருப்பது உறுதி - பரபரப்பு தகவல்!

குழந்தை பலி

உடனே, குழந்தையை கண்ட நாய் அதன் மீது பாய்ந்து, குழந்தையின் முகம், கை, கால், தலை என பல்வேறு பாகங்களை கடித்து குதறி தின்றுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.

படுக்கையில் 5 மாதக் குழந்தை - கடித்து தின்று கொன்ற வளர்ப்பு நாய்! | 5 Month Old Baby Killed By Dog Telangana

வீடு திரும்பிய கணவனும் மனைவியும் இதனைக் கண்டு ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் நாயை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து, குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.