கட்டுப்பாட்டை இழந்து கார் பயங்கர விபத்து ; 5 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்!

Accident Death Chengalpattu
By Swetha May 15, 2024 04:17 AM GMT
Report

செங்கல்பட்டு மாவட்டத்தில் கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கர விபத்து 

செங்கல்பட்டு மாவட்டம் சிலாவட்டம் பகுதியில், பண்ருட்டியை நோக்கி சென்று கொண்டு இருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமத்.

கட்டுப்பாட்டை இழந்து கார் பயங்கர விபத்து ; 5 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்! | 5 Members Dead In Accident Near Chengalpattu

இவர் வெளிநாடு கிளம்பிய நிலையில், தனது கணவரை வழியனுப்பி வைத்துவிட்டு ஜெய் பினிஷா (40) என்பவர் தனது மகன்கள் மிச்சால் (20), பைசல் (12), மற்றும் மகன் அத்தல் (16) ஆகியோர் சென்னை விமான நிலையம் சென்றிருந்தனர். அவரை வழியனுப்பி விட்டு காரில் பண்ருட்டி திரும்பிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் நண்பர்களுடன் கார் ரேஸ்.. விபத்தில் சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் - 3 பேர் படுகாயம்!

நள்ளிரவில் நண்பர்களுடன் கார் ரேஸ்.. விபத்தில் சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் - 3 பேர் படுகாயம்!

உயிரிழப்பு

அந்த காரை ஓட்டுநர் சரவணன் (50) ஓட்டி வந்தார். அப்பொழுது முன்னே சென்ற கனரக லாரி மீது மோதியதில் கார் நொறுங்கியது. இதில் ம்பவ இடத்திலேயே ஓட்டுநர் சரவணன், ஜெய் பினிஷா, மிச்சால், பைசல் ஆகியோர் உயிரிழந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்து கார் பயங்கர விபத்து ; 5 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்! | 5 Members Dead In Accident Near Chengalpattu

இதை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலைமையில், அத்தல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செங்கல்பட்டு பிரதான சாலையில் நடந்த இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.