தீப்பிடித்து தரையில் விழுந்த விமானம்; 5 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்!

United States of America Flight Death
By Swetha Mar 05, 2024 12:20 PM GMT
Report

தீப்பற்றி தரையில் விழுந்த விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீப்பிடித்த விமானம்

அமெரிக்கா, டென்னஸி மாநிலம் நாஷ்வில்லியில் உள்ள நெடுஞ்சாலை அருகே விமான ஒன்றில் விபத்து ஏற்பட்டுள்ளது.

தீப்பிடித்து தரையில் விழுந்த விமானம்; 5 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்! | 5 Dead After Small Plane Crashes

வானில் இருந்து தரையில் விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்துள்ளது. அதில் இருந்த 5 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

 அதனைத் தொடர்ந்து, விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் ஜான் சி டியூன் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விமான நிலையத்தை அடைவதற்குள் என்ஜின் செயலிழந்து விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

நடுவானில் விமான இன்ஜினை அணைக்க முயன்ற பைலட் - குலை நடுங்கிய பயணிகள்!

நடுவானில் விமான இன்ஜினை அணைக்க முயன்ற பைலட் - குலை நடுங்கிய பயணிகள்!


அதிர்ச்சி சம்பவம்

இந்த விமான விபத்து குறித்து நாஷ்வில்லி பெருநகர காவல்துறை அவரது வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தியை பதிவிட்டுள்ளார்.

flight crash

தற்போது, இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.