கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு..கோர விபத்துக்கு இது தான் காரணமா? பரபரப்பு சம்பவம்!

Tamil nadu Chennai Accident Death Thiruvallur
By Swetha Aug 12, 2024 03:20 AM GMT
Report

சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் 

சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வந்த 7 மாணவர்கள் ஆந்திராவுக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் கல்லூரி நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ராமஞ்சேரி பகுதியை கடந்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக கார் லாரி மீது மோதியது.

கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு..கோர விபத்துக்கு இது தான் காரணமா? பரபரப்பு சம்பவம்! | 5 Chennai College Students Died In A Car Accident

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 2 மாணவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து; அடுத்தடுத்து பயங்கரம் - 9 பேர் பலி!

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து; அடுத்தடுத்து பயங்கரம் - 9 பேர் பலி!

கோர விபத்து

இந்த நிலையில், உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் காரில் ஆந்திரா சென்று திரும்பியபோது இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு..கோர விபத்துக்கு இது தான் காரணமா? பரபரப்பு சம்பவம்! | 5 Chennai College Students Died In A Car Accident

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.