நெஞ்சை உலுக்கிய கோர விபத்து; அடுத்தடுத்து பயங்கரம் - 9 பேர் பலி!

Accident Death Chengalpattu
By Sumathi May 16, 2024 03:14 AM GMT
Report

கோர விபத்தில், மனைவி, இரு மகன்கள் மற்றும் டிரைவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோர விபத்து

கடலுார், மேல்பட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஷமீது(50). இவரது மனைவி ஜெய்நிஷா பேகம்(42). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில், சவூதி அரேபியாவில் பணிபுரிய அப்துல் ஷமீதுக்கு, சமீபத்தில் விசா கிடைத்துள்ளது.

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து; அடுத்தடுத்து பயங்கரம் - 9 பேர் பலி! | 4 People Dead Accident Near Chengalpattu

அதன்படி, அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க, அவரது குடும்பத்தினர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அவரை வழியனுப்பிய பின், மாருதி காரில் கடலுாருக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

போதையில் ஓட்டுநர்; பள்ளி மாணவர்கள் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து- 5 பேர் பலி!

போதையில் ஓட்டுநர்; பள்ளி மாணவர்கள் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து- 5 பேர் பலி!


4 பேர் பலி

அப்போது, அதிகாலை 4:00 மணிக்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு சிலாவட்டம் அருகே கார் சென்ற போது, சென்னையில் இருந்து கேரளாவுக்கு, இரும்பு கம்பிகள் ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து; அடுத்தடுத்து பயங்கரம் - 9 பேர் பலி! | 4 People Dead Accident Near Chengalpattu

இதில், ஜெய்நிஷா பேகம், மகன்கள் மிஷால், பைசல், கார் டிரைவர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தனர். உடனே தகவலறிந்து விரைந்த போலீஸார் உடலை மீட்டு விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மேலும், பலத்த காயம் அடைந்த சிறுவன் அப்ஜல் அலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து; அடுத்தடுத்து பயங்கரம் - 9 பேர் பலி! | 4 People Dead Accident Near Chengalpattu

இதனைத் தொடர்ந்து மற்றொரு விபத்தும் நடந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னை சென்ற கார், கல்பாக்கம் அருகே இசிஆர் சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதில் விக்கி, ஏழுமலை, ராஜேஸ் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.