26 வருஷம்.. 49 மாடி கட்டிடம்; ஒருவர் கூட இல்லாமல் காலியாகவே இருக்கும் மர்ம பங்களா - என்ன காரணம்?

Thailand
By Sumathi Sep 27, 2023 10:01 AM GMT
Report

பல வருடங்களாக ஒரு மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடம் காலியாகவே இருந்து வருகிறது.

பேய் டவர்

தாய்லாந்து, பாங்காக்கிற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். உலகிலேயே அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நகராகமாகவும் கருதப்படுகிறது.

26 வருஷம்.. 49 மாடி கட்டிடம்; ஒருவர் கூட இல்லாமல் காலியாகவே இருக்கும் மர்ம பங்களா - என்ன காரணம்? | 49 Storey Ghost Tower In Bangkok

அங்கு வெறிச்சோடிய கட்டிடங்கள் பல இருக்கிறது. அதில், கைவிடப்பட்ட ஒரு கட்டிடம் தான் இந்த 49 மாடி கட்டிடம். 26 ஆண்டுகளாக இந்தக் கட்டிடம் காலியாகவே இருக்கிறது. இதனை பேய் டவர் (Ghost Tower) அழைக்கின்றனர்.

கைவிடப்பட்ட கட்டிடம்

இங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டிடக்கலை வல்லுநரான ரங்சன் டோர்சுவான் என்பவர் கடந்த 1990இல் இந்த கட்டிடத்தை கட்ட முடிவு செய்தார். பணிகள் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைக் கொல்லத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் 1993ல் கைது செய்யப்பட்டார்.

26 வருஷம்.. 49 மாடி கட்டிடம்; ஒருவர் கூட இல்லாமல் காலியாகவே இருக்கும் மர்ம பங்களா - என்ன காரணம்? | 49 Storey Ghost Tower In Bangkok

கொலை எதுவும் நடைபெறவில்லை என்ற நிலையில் 2010ல் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில், அந்நாட்டு பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 80% பணிகள் முடிக்கப்பட்ட போதிலும், கட்டிடம் அப்படியே நின்று போனது.

மேலும், இங்கு 2014ல் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, 2017ல் தி ப்ராமிஸ் என்ற பேய் படத்தின் ஷூட்டிங்கும் இங்கே நடந்தது.

தரைமட்டமாகும்  40 மாடி கட்டிடம் : காணமல் போகும் நொய்டாவின் இரட்டைக் கோபுரங்கள்

தரைமட்டமாகும் 40 மாடி கட்டிடம் : காணமல் போகும் நொய்டாவின் இரட்டைக் கோபுரங்கள்

இடுகாட்டின் மீது இது கட்டப்பட்டதே இந்த முடிவுக்குக் காரணம் எனச் சிலர் கூறுகிறார்கள். இப்படி இந்தக் கட்டிடம் குறித்து பல்வேறு கதைகள் பரவி வந்த வண்ணம் உள்ளது.