எய்ட்ஸை பரப்பனும்; சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுப்பட்ட 41 வயது நபர் - கொடூரச் செயல்!
எய்ட்ஸ் நோயை பரப்ப நபர் ஒருவர் சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் அத்துமீறல்
கேரளா, இடமண் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் 2013ல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் தென்மலை பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அந்த குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனுடன் நெருங்கி பழகி செல்போனில் ஓரினச் சேர்க்கை குறித்த வீடியோவை காண்பித்து ஓாின சோ்க்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
எய்ட்ஸ் நோயாளி
தொடர்ந்து, இவரது தொல்லை அதிகரித்த நிலையில் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், எய்ட்ஸ் நோயை பரப்புவதற்காக திட்டமிட்டு சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பின் அவரை கைது செய்த வழக்கில் 3 ஆயுள் தண்டனையுடன், 22 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.1.05 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவிலேயே இதுமிகவும் மோசமான கொடூரமான சம்பவம் என்றும், இது போல எங்குமே தான் கேள்விப்பட்டதில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
