பிறந்து 40 நாள்தான்; எலியால் பறிப்போன பச்சிளம் குழந்தையின் உயிர் - அதிர்ச்சி பின்னணி!

Telangana Death
By Sumathi Dec 26, 2023 06:47 AM GMT
Report

40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை எலி கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பச்சிளம் குழந்தை

தெலுங்கானா, நாகனூல் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி லட்சுமி கலா. இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்களாகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

உயிரிழந்த குழந்தை

தொடர்ந்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அதனால், லட்சுமி கலா தனது தாயர் வீட்டில் குழந்தையுடன் தங்கி இருந்துள்ளார்.

நடுவானில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை - காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்!

நடுவானில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை - காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்!

எலி கடித்து பலி

அப்போது, 4 நாட்களுக்கு முன்பு குழந்தையின் முகத்தில் எலி ஏறி மூக்கை கடித்துள்ளது. உடனே, அருகில் உள்ள மருத்துவமணையில் பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

telangana

இந்நிலையில் மீண்டும் எலி குழந்தையின் மூக்கினை கடித்து ரத்தம் வந்துள்ளது. வலி தாங்கமுடியாமல் கதறிய குழந்தையினை மருத்துவமனையில் அனுமதித்ததில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.