காதலியை பார்க்க சென்ற இளைஞர் - நள்ளிரவில் நிர்வாணமாக்கி.. கொடூர சம்பவம்!
காதலியை பார்க்க சென்ற இளைஞரை நிர்வாணமாக்கி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிஷாத். இவர் தென்மலை அனூரைசேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நிஷாத் சம்பவத்தன்று இரவு தனது காதலியைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று தகராறு செய்து கொடூரமாகத் தாக்கியுள்ளது.
தொடர்ந்து நிஷாத் நிர்வாணமாக்கி அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டி ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். மேலும், ஒருகட்டத்தில் கத்தியைக் கொண்டு கொலை செய்ய முயன்றபோது நிஷாத் கூச்சலிட்டுள்ளார்.
நிர்வாண தாக்குதல்
இதனைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரைக் கண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த நிஷாத்தை மீட்டு புனலூர் தாலுகா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அந்த பகுதியிலிருந்த சி.சி.டி. ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சுஜித், சஜீவ், சிலின், அருண் என்பது தெரியவந்தது. மேலும் 4 பேரையும் கைது செய்த காவல் துறையினர் நிர்வாணப்படுத்தித் தாக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil
