வீட்டில் வெடித்த ஏசி; 8 மாத குழந்தை உள்பட ஆழ்ந்த தூக்கத்தில் பறிபோன 4 உயிர்கள்!

Gujarat Accident Death
By Swetha Mar 31, 2024 10:57 AM GMT
Report

உறங்கிக்கொண்டிருந்தபோது ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.

வெடித்த ஏசி

குஜ்ராத் மாநிலம் துவாரகா நகரில் உள்ள ஆதித்யா சாலையில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்று அதிகாலையில் வீட்டில் இருந்த 8 மாத குழந்தை மற்றும் ஒரு மூதாட்டி, பவன் உபத்யாய்(39) மற்றும் அவரது மனைவி திதி(29) ஆகியோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, திடீரென ஏசி சாதனம் வெடித்தது.

வீட்டில் வெடித்த ஏசி; 8 மாத குழந்தை உள்பட ஆழ்ந்த தூக்கத்தில் பறிபோன 4 உயிர்கள்! | 4 Of Family Dead In Dwarka House Fire

இதனால் எழுந்த புகை மண்டலத்தில் மூச்சுத் திணறி அந்த குடும்பத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த தகவலறிந்து வந்த போலீசார் 4 பேரின் உடல்களை மீட்டனர்.

பிரமாண்டமாய் வாழ்ந்த தொழிலதிபர் குடும்பம்; விரக்தியில் தற்கொலை - உருக்கமான கடைசி கடிதம்!

பிரமாண்டமாய் வாழ்ந்த தொழிலதிபர் குடும்பம்; விரக்தியில் தற்கொலை - உருக்கமான கடைசி கடிதம்!

பறிபோன உயிர்கள்

பிறகு மேற்கொண்ட விசாரணையில், அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், வெடித்த ஏசி காரணமாக தீப்பற்றியதும் அதன் புகையில் சிக்கி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் மயங்கியதே  உயிர்களின் பலிக்கு காரணம் என முதல்கட்டத் தகவலில் கூறப்படுகிறது.

வீட்டில் வெடித்த ஏசி; 8 மாத குழந்தை உள்பட ஆழ்ந்த தூக்கத்தில் பறிபோன 4 உயிர்கள்! | 4 Of Family Dead In Dwarka House Fire

வீட்டிலிருந்து கிளம்பிய புகையை சாலையில் சென்ற சிலர் கவனித்து தீயணைப்பு துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் தீயை அணைத்து வீட்டின் மேல் தளத்தின் படுக்கையறையில் 4 சடலங்களை கண்டெடுத்தனர்.

அப்போது, அதே வீட்டின் தரை தளத்தில் உறங்கிய பவனின்(90) என்னும் மூதாட்டி வயது மூப்பு காரணமாக படியேற முடியாமல் கீழயே உறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். எனினும் பச்சிளம் குழந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரும் பலியான அதிர்ச்சியில், அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறா